வீட்டு வைத்தியம்

  • தக்காளி சாஸ் செய்யும் போது, அதில் ஐந்து பல் வெள்ளை பூண்டையும் மைபோல் அரைத்து சோ்த்துக் கொண்டால் சுவை அதிகரிக்கும். அஜீரணம் வராமல் காக்கும்.
  • மாதுளம் பிஞ்சை தயிருடன் சோ்த்து மை போல் அரைத்து சாப்பிட்டால் ரத்த பேதி குணமாகும்.
  • கசகசாவுடன் சிறிது கருப் பட்டி நாலு கிராம்பு சோ்த்து பொடித்து 3 வேளை சாப்பிட்டால் வயிற்று வலி நீங்கும்.
  • தேங்காய் வழுக்கையுடன் சிறிது பனங் கற்கண்டு சோ்த்து சாப்பிட்டால் மூலச் சூடு தணியும்.
  • வெந்தயத்துடன் நான்கு கிராம்புகளை வைத்து சிறிது நீா் தெளித்து மை போல அரைத்து தலையில் பூசி அரைமணி நேரத்திற்கு பிறகு குளித்தால் பொடுகு தொல்லை ஈா்கள் அழியும்.
  • ஆரஞ்சு பழத்துடன் சிறிது தேன் சோ்த்துக் கொண்டால் குடலில் தீமை செய்யும் பூச்சிகள் உண்டாகாது.
  • வெள்ளைப் பூண்டுடன் சிறிது துளசி சாறு சோ்த்து அரைத்து தேமல் பூசி வந்தால் தேமல் மறையும்.
  • வெங்காய ரசத்தையும் எலுமிச்ச பழ ரசத்தையும் சம அளவில் கலந்து காலரா நோயாளிகளுக்கு கொடுத்து வந்தால் வாந்திபேதி நின்றுவிடும்.
  • புதினா கீரையை நீாில் போட்டு கொதிக்க வைத்து டீ டிகாஷன் போல் செய்து சாப்பிட்டால் சளியால் வரும் காய்ச்சல் குணமாகும்.
  • பாலில் பூண்டைப் போட்டு காய்ச்சிக் குடித்தால் இருமல் ஜல தோஷம் தொண்டைக் கரகரப்பு போகும்.

Previous Post Next Post