கடன் வாங்காத சூழ்நிலை நமக்கு இருக்க வேண்டும் என்றால், நாம் செய்யவேண்டிய முதல் வேலை என்ன?

 


கடன் வாங்காத சூழ்நிலை நமக்கு இருக்க வேண்டும் என்றால், நாம் செய்யவேண்டிய முதல் வேலை என்ன? நமக்கு வரக்கூடிய வருமானத்திலிருந்து ஒரு சிறு தொகையை சேமித்து வைப்பது தான். இது தான் முதல் வழி. கடன் வாங்காமல் இருக்க வேண்டுமென்றால் சேமிப்பு அவசியம் தேவை. நம்மில் இது பல பேருக்கு தெரிந்திருக்கும். இருப்பினும் நம்மால் சேமிக்க முடியவில்லை. இது இயல்பு. சரி இந்த சேமிப்பை உயர்த்த என்ன செய்ய வேண்டும், எந்த கிழமையில் எந்த திதியில், கடன் தொகையை திருப்பிக் கொடுத்தால் நமக்கு கடன் சுமை மீண்டும் மீண்டும் ஏற்படாமல், பாரம் குறையும் என்ற கேள்விக்கான பதிலை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

கடன் தொகையை திருப்பி செலுத்த வேண்டிய அந்த நாளை தெரிந்து கொள்வதற்கு முன்பாக, வெள்ளிக்கிழமை தினத்தை பற்றிய ஒரு சின்ன விஷயத்தை இன்று நாம் தெரிந்து கொள்வோம். பணத்தை சேமிப்பதற்கும், கடனை தீர்ப்பதற்கும், வெள்ளிக் கிழமைக்கும், நிறையவே சம்பந்தம் உண்டு.


முதலில் வெள்ளிக்கிழமை சுக்கிர பகவானுக்கு உரிய தினமாக சொல்லப்பட்டுள்ளது. சுக்கிரனுக்கு உகந்த இந்த தினத்தில் நாம் பணத்தை சேமிப்பதற்கான செயல்பாடுகளை தொடங்கலாம். சுக்கிர பகவானின் ஆதிக்கமானது பிரபஞ்சத்திலிருந்து பூமிக்கு அதிகமாகப் பெறப்படுவதும் இந்த வெள்ளிக்கிழமை தினத்தில் தான். முடிந்தவரை யாருக்கும், வீட்டிலிருக்கும் பெண்களது கையால் பணத்தை கொடுக்காமல் இருப்பது நல்லது. சுக்கிர பகவானிடமிருந்து பெறக்கூடிய ஆற்றலை, மகாலட்சுமியின் அம்சத்தில், வீட்டில் இருக்கும் பெண்கள், தங்களுடைய கையால் வெளியில் கொடுக்கும் பட்சத்தில், நம் வீட்டில் லட்சுமி கடாட்சம் குறையும் என்றும் நம்முடைய சாஸ்திரம் சொல்கிறது.


வெள்ளிக்கிழமை தினத்தில் அத்தியாவசிய தேவைகளுக்கான செலவுசெய்து, அதற்குண்டான பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். தான தர்ம காரியங்களில் ஈடுபடலாம். சுமங்கலி பெண்களுக்கு தானம் கொடுக்கலாம். இவ்வாறாக சுபச் செலவுகளை செய்வதில் தவறு ஒன்றும் இல்லை. அனாவசியமாக யாருக்கேனும் பணம் கொடுப்பதாக இருந்தால் முடிந்தவரை அதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

முடிந்தால் வெள்ளிக்கிழமை தினங்களில் உங்கள் வீட்டு அரிசி மூட்டையில், ஒவ்வொரு ரூபாய் நாணயத்தை போட்டு வாருங்கள். உங்களுடைய வீட்டில் சேமிப்பு உயர்ந்து லட்சுமி கடாட்சம் நிலைத்திருக்கும். சரி, இப்போது கடனை நாம் எந்த கிழமையில் திருப்பித் தந்தால் கடன் பிரச்சினை தீரும் என்பதை தெரிந்து கொள்வோமா?

  • வெள்ளிக்கிழமை அன்று, அஷ்டமி திதி வரும் பட்சத்தில் அன்றைய தினத்தில், அந்த வீட்டில் இருக்கும் ஆண்களது கையால் கடன் தொகையை, திருப்பிக் கொடுக்கலாம். அப்பக்கூட பெண்கள், உங்கள் கையால் கடன் தொகையை திருப்பிக் கொடுக்க கூடாது.

  • மற்ற சமயங்களில் வெள்ளிக்கிழமை அநாவசியமாக யாருக்கும் பணம் கொடுக்கக் கூடாது. இருப்பினும் அஷ்டமி திதி அன்று வரக்கூடிய வெள்ளிக்கிழமையில் நாம் யாரிடம் கடன் வாங்கி இருக்கின்றோமோ, அவருக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தினோம் என்றால், அந்த கடன் தீரும் என்று சொல்லப்பட்டுள்ளது. இதன் மூலம் அஷ்டலட்சுமிகளின் ஆசீர்வாதத்தையும் நாம் பெற்று நம்முடைய வாழ்க்கையில், இனி வரும் காலங்களில் கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்படாமல் இருக்கும். ஒரு முறை முயற்சி செய்து தான் பாருங்களேன் நல்ல பலன் கிடைத்தால் இதையே பின்பற்றி கொள்ளலாம்.

أحدث أقدم